Posts

Showing posts from July, 2025

என் உலகம் என் பெற்றோர்

 என் உலகம் என் பெற்றோர் என் பெற்றோரே என் கண்கள் // எனக்கு உயிர் கொடுத்தது பெற்றோர்களே// என் மழலைப் பேச்சை கேட்டு, என் நடைப் பயணத்தை வழிகாட்டி  என் குரலை கம்பீரமாக உயர்த்தி என் பயத்தை தெளிவு படுத்தி, என் சந்தேகங்களுக்கு பதில் கொடுத்து, என்னை செல்வ செழிப்பில் வளர்த்து, எனக்கு தேவையானதை தேடிப் பிடித்து, என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க, எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து, என்னை உடலில் வளர வைத்து, என்னை மனதளவில் உயர வளர்த்து, என்னை எழுத்துலகில் புகழ வைத்த, என் உலகம் என் பெற்றோர்களே. முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்