வலி தந்த நினைவுகள்
வலி தந்த நினைவுகள் வயதான பெண்மணியிடம் கேட்ட மன வேதனைகள்// சாலை ஓரத்தில் அனாதை பிச்சைக்காரன் சடலத்தைக் கண்ட மன வேதனை// குடிகாரக் கணவனிடம் சிக்கித் தவித்த பெண்மணியைக் கண்டதால் மன வேதனை// அநீதிக்கு நீதி தந்ததைக் கேட்டு மனவேதனை// பெற்றோர்களை ஒதுக்கிய குழந்தைகளைப் பார்த்த மன வேதனை// வழிப்பறியை, கண்டும் காணாதது போவோரைப் பற்றிய மன வேதனை// சொத்து இருந்தால் சொந்தம் என்பதை நினைத்து மனவேதனை// பணம் இருந்தால், பகைவனும் நண்பனாவான் என்பது நினைந்து மனவேதனை// உறவுக்கு மதிப்பு குறைவது பற்றிய மனவேதனை// பணம் பாதாளம் வரைக்கும் பாயும் உண்மை கண்ட மன வேதனை// சுதந்திரம் கிடைத்தும் கிடைக்காதது கண்டு மனவேதனை// இயற்கை வளங்களை அழிப்பது கண்டு மன வேதனை// மற்றவர்களின் ஆனந்தத்தை ஒழிக்க நினைப்பது கண்டு மனவேதனை// எதிலும் எங்கும் அடக்கு முறை ஒழியாதது கண்டு மனவேதனை// துணிந்தால் துன்பத்தை ஓட்டலாம் துணியாது கலங்கி நிற்பது கண்டு மன வேதனை// மன வேதனைகளை மங்காது காப்பது வேதனையிலும், வேதனைதானே?|...... வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்