வலி தந்த நினைவுகள்

 வலி தந்த நினைவுகள்


வயதான பெண்மணியிடம் கேட்ட மன வேதனைகள்//


சாலை ஓரத்தில் அனாதை பிச்சைக்காரன் சடலத்தைக் கண்ட மன வேதனை//


குடிகாரக் கணவனிடம் சிக்கித் தவித்த பெண்மணியைக் கண்டதால் மன வேதனை//


அநீதிக்கு நீதி தந்ததைக் கேட்டு மனவேதனை//


பெற்றோர்களை ஒதுக்கிய குழந்தைகளைப் பார்த்த மன வேதனை//


வழிப்பறியை, கண்டும் காணாதது போவோரைப் பற்றிய மன வேதனை//


சொத்து இருந்தால் சொந்தம் என்பதை நினைத்து மனவேதனை//


பணம் இருந்தால், பகைவனும் நண்பனாவான் என்பது நினைந்து மனவேதனை//


உறவுக்கு மதிப்பு குறைவது பற்றிய மனவேதனை//



பணம் பாதாளம் வரைக்கும் பாயும் உண்மை கண்ட மன வேதனை//


சுதந்திரம் கிடைத்தும் கிடைக்காதது கண்டு மனவேதனை//


இயற்கை வளங்களை  அழிப்பது கண்டு மன வேதனை//


மற்றவர்களின் ஆனந்தத்தை ஒழிக்க நினைப்பது கண்டு மனவேதனை//


எதிலும் எங்கும் அடக்கு முறை ஒழியாதது கண்டு மனவேதனை//


துணிந்தால்

துன்பத்தை ஓட்டலாம்


துணியாது கலங்கி நிற்பது கண்டு மன வேதனை//


மன வேதனைகளை

மங்காது காப்பது வேதனையிலும், வேதனைதானே?|......


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்