Posts

Showing posts from September, 2022

என்னுள் நான்

 🌷என்னுள் நான் 🌷மக்கள் பணிக்காக மாவட்ட ஆட்சியாளராக விரும்பினேன்// 🌷மக்கள் சேவையாக வழக்கறிஞர் ஆக விரும்பினேன்// 🌷மக்களோடு தொடர்புடைய எழுத்தாளர் ஆக விரும்பினேன்// 🌷மனது நினைத்தது, 🌷மாறாமல் நடந்தது// 🌷மனதில் உதிக்கும் கற்பனைகளை, 🌷மட மடவென எழுதி மக்களிடம் சேர்ப்பேன்// 🌷மக்கள் சேவையாக சமூகம் சார்ந்தவைகளை எழுதுகின்றேன்// 🌷மகுடம் வேண்டாம்// 🌷மக்கள் சீர்கேட்டை , 🌷மக்கள் சிந்திக்க 🌷மனதில் உதித்தவைகளை எழுதுகின்றேன்// 🌷மன்றாடினாலும், 🌷மாறாதோர், 🌷மனதை சிந்திக்க வைத்துவிடும் எழுத்து களின் வரிகளைத் தாங்கியப் புத்தகம் என்ற புதையல்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

கல்வி

 V.S.ROMA வி.எஸ். ரோமா கோயம்புத்தூர் 🌷கல்வி 🌷மனிதனின் வாழ்வை நல்வழிப்படுத்துவது கல்வியே // 🌷மனிதனுக்கு அறிவைப் புகட்டுவது கல்வியே // 🌷மனிதனுக்கு நீதி நெறிகளை வழிப்படுத்துவது கல்வியே // 🌷மனிதனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது கல்வியே // 🌷மனிதனுக்கு 🌷மனநல வளர்சிக்கு உதவுவது கல்வியே // 🌷மனிதனை சமுதாயத்தில் உயர வைப்பது கல்வியே // 🌷மனிதச் செயல்களின் சிறப்புக்குக் காரணம் கல்வியே // 🌷மனிதனுக்கு கல்வி என்பது முடிவற்றது// 🌷மனிதன் கல்வி கற்க வயது ஓர் தடையில்லை// 🌷மனிதனுக்கு கல்விச் செல்வம் சிறந்த செல்வம்// 🌷மனிதனுக்கு கல்விச் செல்வம் அழியாத செல்வம்// 🌷மனிதனின் அறிவுக் கண்ணைத் திறப்பது கல்வியே // 🌷மனிதன் கல்வியைக் கற்று, 🌷மங்கா, 🌷மகிழ்வுப் பெற்று வாழ வேண்டும்// 🌷முற்போக்கு எழுத்தாளர் 🌷வி.எஸ்.ரோமா 🌷V.S.ROMA 🌷கோயம்புத்தூர்

மகிழ்வு

 மகிழ்வு மற்றவர்கள் மனதை புண்படுத்தாது, மற்றவர்களோடு ஒற்றுமையாய் வாழ, மனிதர்கள் முன் வந்தால், மனக்குழப்பம், மனப் போராட்டம் இல்லாது, மனதானது, மகிழ்ச்சியாய் இருக்கும், மற்றவர்களையும், மகிழச் செய்யும். மகிழ்வே..... மனிதனுக்கு வாழ்வுத் தூண்கள்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

 ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் 🌷ஆசிரியர்களே நமக்கு அஸ்திவாரம்// 🌷எழுத்தறிவைப் புகட்டி  🌷அறிவை வளர்த்து 🌷ஒழுக்கம் கற்றுக்கொடுத்து 🌷தன்னம்பிக்கை ஊட்டி 🌷ஊக்கம் கொடுத்து 🌷உயர்வைக் கொடுக்கும் 🌷ஆசிரியர்கள் 🌷🌷🌷🌷அனைவருக்கும்  🌷ஆசிரியர் தின 🌷🌷🌷நல்வாழ்த்துகள் 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்