Posts

Showing posts from July, 2023

மனிதர்கள்

 மனிதர்கள் மனிதன் மன்னிக்கப் பழக வேண்டும்// மறுப்பு பேசியே வாழ்வை ஓட்டக் கூடாது// மனித மனம் மகிழ்வை நோக்கி ஓட வேண்டும்// மனிதர்கள் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும்// மனதார வாழ்த்து சொல்லிப் பழக வேண்டும்// மக்கள் மத்தியில்  மனித நேயம் ஓங்க வேண்டும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தோள் கொடுப்பான் தோழன்

 தோள் கொடுப்பான் தோழன் தோழன் நமக்கத் தகப்பனே // தோழன் நமக்குத் தாயுமே// தோழன் நமக்கு ஓர் அறிவுரையாளரே // தோழன் நமக்கு நட்பு மட்டுமல்ல உயிருமே// தோழன் இருந்தால் நமக்கு ஓர் நம்பிக்கையூட்டியே // தோழன் தடுக்கி விழாமல் பார்ப்பவனே // தோழன் இருந்தால் சிக்கல் பனி போலாகும்// தோழன் நம்முடன் இருக்கும் தெய்வமே // தோள் கொடுக்கத் தோழன் இருந்தால் தோல்வியும் வெற்றியே// தோள் கொடுக்கத் தோழன் இருந்தால் ஆறுதலுக்கு அளவேயில்லை// தோழன் கண் இமை போன்றவரே// தோழன் உடன் பிறந்தவன் போன்றவரே// தோல்வியைக் கண்டு துவண்டு போகாது காப்பவன் தோழனே // தோழன் உடனிருந்தால் வெற்றிக்கு நடைபாதையே / தோழன் சாதனைப் படைக்க துணையிருப்பவனே // தோழன் முயற்சி செய்ய  ஊட்டச்சத்துப் போன்றவனே // தோழன் வெற்றி வாகைச் சூட வலது கை போன்றவனே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தனிமை

  தனிமை தனிமை என்பது நன்மையும் தீமையும்// தன்னலம் தனிமையை விரும்புவது இயற்கை// தத்தளிக்கும் தனிமை ஒரு கொடுமை// தனிமையில் சாதித்தவர்களும் என்றும் உண்டு// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

லேசா லேசா🌷

 வாலியின் பாடல் வரியின் கவிதை 🌷லேசா லேசா🌷 🌷நீ என்னுடனுடன் இருந்தால் மனசு லேசாகுமே // 🌷நீ வருகை புரிந்தால் மகிழ்ச்சி லேசாகுமே// 🌷நீ பலவானாக இருந்தால் மனசு லேசாகுமே// 🌷நீ பணம்படைத்தவனாக இருந்தால் பொருளாதார சிக்கல் லேசாகுமே// 🌷நீ குடிநோயாளியாக இருந்தால் மனசு லேசாகுமா? 🌷நீ திமிர்வாதக்காரனாக இருந்தால் மனசு லேசாகுமா? 🌷நீ சோம்பேறியாக இருந்தால் மனசு லேசாகுமா? 🌷நீ கொள்ளை நோயிடம் அகப்பட்டால் மனசு லேசாகுமா? 🌷நீ உறவுகளை உதறினால் மனசு லேசாகுமா? 🌷நீ கடனாளியாக இருந்தால் மனசு லேசாகுமா? 🌷நீ சுயநலத்தோடு இருந்தால் மனசு லேசாகுமா? 🌷நீ அன்பில்லாது இருந்தால் மனசு லேசாகுமா? 🌷உன் அநீதி என் மனதை லேசாக்குமா? 🌷உன் உரத்த சிந்தனை நம் எதிர்காலத்தை லேசாக்கும்// 🌷உன் கனிவான பேச்சு அனைவரையும் லேசாக்கும்// 🌷உன் இரக்கம் கலந்த அன்பு அகிலத்தையும் லேசாக்கும் 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

பனிக்கட்டி மழை

 பனிக்கட்டி மழை பனிமழையில் குடை பிடித்து மகிழ்ந்தேன்// பரவசத்தால் செல்லும் திசையறியாது தடுமாறினேன்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

ஆயத்தமா

  ஆயத்தமா விண்ணிற்கு செல்ல நீ ஆயத்தமா? விரைவாக ஏற முயற்ச்சி செய்கின்றாயா? விடியும் என்று நீ காத்திருக்காது, விரைவுப் படிகளில் துரிதமாக ஏறுகின்றாயா? வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மனம் போன போக்கில் பேnகாதே

 மனம் போன போக்கில் பேnகாதே மனம் மதுவை தொடச் சொல்லும், மாற்றி வார்த்தைகளைப் பேச வைக்கும். மன்னிப்புக்கு இடம் கொடுக்காது வைக்கும், மனசு நினைக்கும் போக்கில் போகாதே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

என் பார்வை

 என் பார்வை என் விழியில் உன்னைக் கண்டேன்// என் பார்வைக்கு அருமையான செயல், என் பேச்சுக்கு மரியாதை கலந்த அன்பு, என்றும் மாறாத நல் குணங்கள், எப்பொழுதும் சிரித்த மலர்ந்த முகம், என் கற்பனைக்கு ஏற்ற மனிதநேயம், எதிர்வாதம் இல்லாத பணிவு கலந்த  இரக்கம், எப்பொழுதும் பதட்டம் இல்லாத நெஞ்சம், என்னிடம் அன்போடு கலந்த ஆறுதல்கள், என் கனவு நிதர்சனம் ஆகுமா? வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

கல்விக் கண் திறந்த காமராசர்

  கல்விக் கண் திறந்த காமராசர் கல்விக்கு வித்திட்டு அமோக விளைச்சலைப் பெற்றவர்// கர்ம வீரர் பட்டம் பெற்றாலும், கர்வம் கொள்ளாது வாழ்ந்து, கற்பக விருட்சம் போல் வாழ்ந்து, கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுக்கு தலைவணங்கி, கல்வியோடு பசியைப் போக்கித் தந்து, கலகம் இல்லாது வாழ்ந்து, கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காது கடமை தவறாத முதலமைச்சராக இருந்து, கடைசி காலத்திலும் கையில் காசு சேர்க்காது, வாழ்ந்து சென்ற மாமனிதர் காமராஜ் ஐயா அவர்கள். கண்ணீர் மல்க காமராஜ் ஐயாவை நினைக்கின்றேன். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அம்மா

 அம்மா அம்மா 1. அம்மா அதட்டிப் பேசி பயமுறுத்துவார். 2. அம்மா அன்பால் அடிபணிய வைப்பார். 3. அம்மா வீட்டு பணிகள் கற்றுக் கொடுப்பார். 4. அம்மா உறவுகளைக் காட்டி கொடுப்பார். 5. அம்மா உறவுக்குப் பாலம் போன்றவர். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அப்பா

 அப்பா 1. அன்போடு அடக்கியாள்பவர் 2. அனுதினமும் சலிக்காது கடமைச் செய்பவர். 3. அறிந்தும் அறியாததுபோல் நடிக்கும் பக்குவம்// 4. செய்ததை சொல்லாது கட்டிக் காப்பவர். 5. கல்விக்கு முக்கியத்துவம் தந்து முன்னேற துணை நிற்பவர். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மனித வாழ்க்கையை எதிர்கொள்ளும் சவால்கள

மனித வாழ்க்கையை எதிர்கொள்ளும் சவால்கள நான் குறை மாதத்தில் பிறந்தவுடன் உயிர்பிழைக்க சவால்// நான் பள்ளிப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க சவால்// நான் விரும்பிய கல்லூரியில படிக்க சவால்// நான் விரும்பிய பாடம் எடுத்துப் படிக்க சவால்// நான் விரும்பிய பணி கிடைக்க சவால்//நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லி சவால், நான் சமுதாயத்தைப் பற்றி எழுதியது சவால்// நான் எழுத்துத் துறையில் முன்னேற சவால்// நான் எழுத்துத் துறையில் வேரூன்றிய சவால்// நான் இருந்தாலும், நான் இறந்தாலும், நான் எழுதிய முற்போக்கான புத்தகங்கள், நான் பெற்ற கடவுள் பரிசாக நினைத்து, நான் மகிழ்கின்றேன்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மனசு

  மனசே அனைத்துக்கும் அடித்தளம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

உன்னை அறிந்தால் தோல்வி ஏதும் இல்லை

 உன்னை அறிந்தால் தோல்வி ஏதும் இல்லை உன்னையறிந்தால் உன் செயல்கள் தெளிவுப்பட்டு, உன் கனவுகள் நினைவுகளாகி, உன் திறமைகள் வெளிப்பட்டு, உன் வீரம் உன்னையறியாது வெகுண்டெழுந்து, உன் சோதனைகள் சாதனைகளாக, உன்னையறியவது முதலில், உன் சிறப்பு வெளிப்படுவது அடுத்தது உறுதியே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக -

 முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக -  🌷மனிதனை மனிதனே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷாவை ஒழித்து, 🌷மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் அமைத்துத் தந்து,  🌷மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 🌷மாநில முதல்வர்களை சுதந்திர தினத்தில் தலைமைச் செயலகத்தில்  கொடியேற்ற வைத்து, 🌷மறுமணத்திற்கு நிதியுதவி அளித்து, 🌷மக்கள் நலத் திட்டமான விவசாயிகளின் மின் மோட்டார்களுக்கு இலவச மின்சாரத் திட்டம் கொண்டு வந்து, 🌷மனமகிழ்ச்சியாக பெண்கள் இருக்க சொத்தில் சமபங்கு தமிழகத்தில கொண்டு வந்து, 🌷மகளிர் சுயஉதவிக்குழு கொண்டுவந்து, 🌷சென்னை என அனைத்து மொழிகளிலும் அழைக்கச் செய்து, 🌷மக்களும் விவசாயிகளும் பயன்பெற உழவர் சந்தை ஆரம்பித்து வைத்து, 🌷மக்கள் வித்தியாசம் பார்க்காது வாழ சமத்துவபுரம் திறந்து வைத்து, 🌷மாணவ , மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்ல இலவச பேருந்து பயணம் ஆரம்பித்து வைத்து, 🌷மக்கள் பட்டினியில்லாமல் வாழ நியாயவிலைக் கடைகளில் 20 கிலோ அரிசி விநியோகம் செய்து, 🌷மக்களுக்குச் செய்ய முடிந்ததை சொல்லி துணிச்சலுடன் செய்து முடிக்கும், 🌷மாமன்னன் இறந்தாலும், இருந்து கொண்டு, 🌷மகன் ரூபத்தில் மக்களுக்குப்  பண...

நீ மாறு சமூகம் தானாக மாறும்

 நீ மாறு சமூகம் தானாக மாறும் தமிழர் பண்பாட்டை மறவாது இருந்து, முன்னோர் வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து, முதியோர்களை மதித்து வழிகாட்டியாக நடந்து மேலைநாடுகளின் மோகம் இல்லாதிருந்து கொண்டு, நம் நாட்டு கலாச்சாரத்தை கடைப்பிடித்து, நமக்கு என்று எதையும் பார்க்காது, மற்றவர்களையும் பார்த்து உதவி செய்து, தேனீ போல் சுறுசுறுப்பாக பாடுபட்டு, சமூகமே நம் மனதில் வேரூன்றிருக்க, இப்படி நாம் மாறினால் சமூகம் மாறும்// மகிழ்ச்சி உயிர் உள்ள வரை நீடிக்கும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்