Posts

Showing posts from June, 2023

தாமரைப பூ

 தாமரை தாமரைப பூ உன் நிறம் காண அழகு// உன் பரந்த இதழ் அழகு // உன்னைப் போல் முகம் பேரழகு// உன் இலையில் தண்ணீரொட்டாதது ஆச்சர்யம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மனிதாபிமானம்

 மனிதாபிமானம் மனிதர்கள் அனைவரும் மத வேற்றுமை பாராது, மனிதனின் இரத்தம் ஒரே நிறம் என நினைத்து, மனிதன் விபத்தில் சிக்கினாலோ, மனிதன் துன்பத்தில் சிக்கினாலோ, மனிதன் பொருளாதார சிக்கலில் சிக்கினாலோ மனிதர்கள் யாராக இருந்தாலும், மனித உணர்வுகளை அறிந்து  மனிதாபிமானத்தோடு, மற்றவர்களோடு ஒத்துழைப்பு கொடுத்து, மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பூனைக்குட்டி

 பூனைக்குட்டி என் முகம் எனக்கு அழகு// என்னை வென்றவர் யாரும் இல்லை// என் வீரம் புலிக்கு ஈடானது// என் விருப்பம் பால் குடிப்பது அதிகமே// என் உணவு விருப்பம் கருவாடு அதிகமே// என் உறவுகள் எனக்கு பால்சோறு வைப்பவர்களே// எது வந்தாலும் சப்தமிட்டு வெளிப்படுத்தி, எல்லோருக்கும் விழிப்புணர்வு கொடுப்பதே// எனக்கு வசிப்பிடம எதுவென்று சொல்ல முடியாதே// என் விரோதிகளை, என் நகத்தால் கீறிடுவேனே // எப்படியும் நாயும் பூனையும் மாதிரி, என்கின்ற பழமொழியால் , மக்கள் மனதில் நிற்கின்றேனே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

விடியல்

 விடியல் இன்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு// இல்லாததை இருப்பவை என்று சொல்வது// இனிய சொற்கள் இப்பொழுது இல்லை// இன்னல்களுக்குத் துணை நிற்பது // இன்பங்களைப் பகிர்வது இல்லை// இரவில் உறக்கமின்றி உழைப்பது // இறந்தும் இறவாத மனித மனம்? இதற்கெல்லாம் விடியல் கிடைத்தால், இன்பமாக மகிழ்வு பொங்க வாழ்வது உறுதி// வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

தந்தையர் தினம்

 தந்தையர் தினம் அப்பாவே அறிவை வளர்த்து அறியாமையை விலக்கி, அன்பாக இருந்து, அனைவர் முன்பும் அசத்தலாக வைத்து, அகம் மகிழ்பவர்// அன்று முதல் இன்றுவரை அபூர்வ செயல்களை அசத்தலாக செய்ய வைப்பவர் அப்பா என்றால் மிகையாகாது// அன்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, இன்று எழுத்துக்கு முக்கியத்தும் கொடுத்து, அனைவரும் பாராட்டும்படி என்னைப் பார்த்து மகிழ்பவர் என் அப்பா ... அது எப்படி இது எப்படி என்று இருவரும் வாதாடுவதோ? அன்று முதல் இன்றுவரை... அப்படியே .... அப்பாக்கள் அனைவருக்கும் இன்றைய "தந்தையர் தினத்தில் இனிய நல்வாழ்த்துகள்  வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

புத்தகம்

 புத்தகம் புத்தகமே என் சுவாச மூச்சே// புத்தகமே என் வாழ்வின் படிகளே// புத்தகத்தின் அறிவு நம்மை உயர்த்துமே // புத்தகமே என் உயிர் நண்பனே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அன்பின் வலிகள்

 அன்பின் வலிகள் அன்பை அதிகம் செலுத்தினால், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அதன் மதிப்பை புரியாது நடந்து, அன்பை மகிழ்விக்காமல், வலியைக் கொடுப்பர்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

இரு மலர்கள்

இரு மலர்கள் இருமலர்களின் அழகு இயற்கை நியதியே // இனிய முகம் போல் காட்சியளிக்குதே// இருமலர்களும் நிறத்தில் அழகு சேர்க்குதே// இம் மலர்களை விரும்பாதவர்கள் இருப்பார்களோ?// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பொருளாதாரம்

 பொருளாதாரம் விவசாயமே பொருளாதாரத்தின் திறவுகோள் // விளைநிலங்களையும், தண்ணீரையும் காப்போம்// உயர்வடைவோம்// வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

வெண் கொக்கு

 வெண்   கொக்கு  நீ மீன் பிடிப்பது அழகு// நீ பால் போன்று நிறம்/ நீ பார்ப்பதற்கு அமைதியாக இருக்கின்றாய்/ நீ  திறமையை மீனிடம் சிறப்பிக்கின்றாய்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பூந்தோட்டம்

 பூந்தோட்டம் பூக்கள் மனம் எங்கும் பரவுமே // பூக்கள் வியாபாரம் மகிழ்வோடு பெருகுமே// பூச்செடிகள் மனிதனுக்கு  ஆக்ஸிஜன் கொடுக்குமே // பூக்கள் கோவில்  பூஜைக்கு உகந்ததே// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அலைபேசி

அலைபேசி அலைபேசி என்றாலே, அகிலமும்  அடங்குமே// அனைவரும் சந்தித்து, அளவில்லா மகிழ்வோடு பேசி மகிழவே // அற்புதம் செய்யும் அலைபேசியோ அனைவரது கைக்குள் அடங்குமே // அளவில்லா செய்திகளை, அறிவிக்குமே // அகிலத்திலுள்ள உறவுகளோடு உறவாடலாமே// அகிலத்திலுள்ள நூல் நிலையங்கள  அனைத்தையும் படிக்கலாமே// அறிவைப் பெருக்க மட்டும் பயன்படுத்த வேண்டுமே // அழிவுக்குப் பயன்படுத்த வேண்டாமே// அலைபேசி அழைப்பை அழைக்கலாமே// அனைத்து அற்புதச் செயல்களையும் அலைபேசி மூலம் செய்யலாமே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தா

வேலை

 வேலை வேலை வேலைக்கு மனதும் நேரமும் வேண்டும்// வேலையில் துரிதத்திலும் செம்மை வேண்டும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்