Posts

Showing posts from October, 2023

நம்பிக்கை

 நம்பிக்கை நல்லது நடக்கும் என்று நம்பினால், நல்லது நம்மை கட்டிக் காக்கும்// நாலு பேருக்கு செய்யும் உதவி, நம்மை என்றுமே மகிழ்வில் வைக்கும். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

ஒற்றுமையைப் போற்றுவோம்

 ஒற்றுமையைப்  போற்றுவோம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு/ ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு// ஒற்றுமை இருந்தால் போராட்டம் இல்லை// ஒற்றுமைக்கு மனக் குழப்பமும் இல்லை // ஒரு கை ஓசை வருமா?// ஒற்றுமை பலமிருந்தால் போர் இருக்காது// ஒத்தாசை ஓங்க ஒற்றுமை வேண்டும்// ஒருவரும் இல்லை என்ற கவலையில்லை// ஒருமை பன்மை வித்தியாசம் அறிந்து, ஒருமனப்பட்டு ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும்// ஒரு வீடு இருவாசல் தேவையா?// ஒற்றுமையோடு இருந்தால் குடும்பம் நலமே // ஒற்றுமையோடு இருந்தால் நாடும் நலமே // ஒற்றுமையை அனைவரும் கடைபிடித்து மகிழ்வோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மனித நேயம் எங்கே போனது?

 மனிதம் தொலைந்ததோ மனித நேயம் எங்கே போனது? மனிதன் பொருளாதாரத்தில் சிக்குண்டானாலும் சரி, மற்றவர்களின் துன்பத்துக்கு ஆளானாலும் சரி, மனதார இல்லாது மனதை ஒடுக்கி, மக்கள் மத்தியில் பெயரளவில் நடக்கும், மனிதர்களே நாளை நமக்கும் இப்படியே, மனதளவில் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்து, மனிதன் மற்றவர்களின்  சிரமங்களை தனதாக்கி, மனதார உதவ முன் வந்து, மகிழ்ந்து மகிழ வைத்து வாழ வேண்டும். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வெற்றித் தடம்

 வெற்றித் தடம் மனிதன் இலட்சியம் கொண்டு பயணிக்க, மகத்துவம் கொண்டு பயணம் வெற்றியாகி மக்கள் பாராட்ட துன்பம் ஓட்டமாக, மனிதன் மலரும் முகமாக  பயணிக்க, மனிதன் முயற்சியை விடாது பிடிக்க, மனதை ஒரு நிலையாக வைத்து, மனமது சுகமானால் காரியம் வாய்க்கும். மனிதன் முயற்சி படிகளில் ஏறி, மனதை நேர் பாதையில் வைத்து, மகிழ்ச்சியோடு வெற்றித் தடத்தில் பயணிப்போம் வி.எஸ்.ரோமாகோ யம்புத்தூர்
 அப்துல் கலாம் விமானம் ஓட்டி ஆக கனவு கண்டு, முயற்சி செய் முடியும் வரை முயற்சி செய்// விஞ்ஞானியாகி விண்வெளியில் தடம் பதித்து, கற்பிப்பதில் ஆர்வத்தினால் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகி இந்திய ஜனாதிபதியாகி இந்திய மக்களின் நாயகனார். எழுத்து மூலம் உயிர் கொடுத்த அக்னி சிறகுகள், என்றும் உலா வந்து கொண்டிருக்கும். கனவு காணுங்கள்  கனவை விழிப்புடன் காண் என்றார். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களே இமைப்பொழுதும் வீணாக்காதே என்றார். இந்தியாவின் முன்னோடி இளைஞர்களின் முன்னோடி இருந்த போதிலும் இறந்த போதிலும் இறவாத மாமனிதன் அப்துல்கலாம் ஐயா அனைவரது உள்ளத்திலும் பதிந்துவிட்டார். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வறுமை

 வறுமை வறுமையிலும் உண்மை நல் மனிதனுக்கு வேண்டும்// வறுமை என்றும் நிரந்தரம் அல்ல. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

புள்ளி விபரம்

 புள்ளி விபரம் நாட்டின் மற்றும்  குடும்பத்தின் வளர்ச்சிக்கும், நம்பி ஏமாறாமல் இருக்கவும் புள்ளிவிபரம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நேரம்

 நேரம் நேரம் சரியில்லை ஜாதகம் சரியில்லை// நேரம் கெட்ட நேரம் என்று, நேரத்தை கடத்த பயப்படுவது வேண்டாம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

கடிகாரம்

 கடிகாரம் கடிகார முள் வாழ்வின் வழிகாட்டி// கடிகாரம் நமக்கு மட்டுமா? உலகத்திற்கே. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

சகோதர அன்பு

 சகோதர அன்பு சகோதர அன்பு தந்தைக்கு ஒப்பானது // சகோதர துணிவு நமக்கு வழிகாட்டி // சண்டை போட்டாலும் பாசம் கொடுத்து, சச்சரவுகள் அதிகரித்தாலும் அன்பை  அதிகரித்து, அசத்தலான கம்பீரத்தை வெளி காட்டி. அன்பின் அடையாளம் சகோதரனே என உணர்த்தி, அதிகாரமாக பேசினாலும் அன்புக்கு வழிகாட்டியாய், அன்பு சகோதரர்களே முன்னோடிகள் ஆவர். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

மிருதுவான இதயம்

மிருதுவான இதயம் மனப்பக்குவம் அடைந்து செயல்பட்டு, மனரீதியாக இதயத்தில் போராட்டமில்லாது சாந்தமடைவோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

இயற்கை

இயற்கை நிலவு தண்ணீரிலும் நகலெடுத்து  மகிழ்விக்கும்/ நிம்மதி தேடி குளக்கரை வந்தேன். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தீண்டாமை

 தீண்டாமை தண்ணீரை குப்பியில் கொடுக்க  கூடாதோ // தவிக்கும் வாய்க்கு தண்ணீர் மகிழ்ச்சியே// தடுமாறி கையில் குடிப்பது சிரமம் தானே // தவிச்ச வாய்க்கு தண்ணீர் பாராட்டு பாப்பா // தண்ணீரை குப்பியோடு அப்படியே கொடுக்கலாமே? வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மகாத்மா

  மகாத்மா இளம் வயதில் மது, மாது தொடாது// இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை கையாண்டார்// இந்திய சமூக தீமைகளிலிருந்து காப்பாற்றினார்// இந்தியாவுக்கு வன்முறை யில்லாத  சுதந்திரம் பெற்றுத் தருவது// இந்திய நாட்டில் மதச்சார்பின்மையை கடைபிடித்தார்// இந்தியர்களால் தேசத்தந்தை என்று அழைக்க // இறை தியானம் மிகுதி கொண்டு// இன்னல்களை இலகுவாக கடந்து வந்து// இந்தியா சுதந்திரம் என்றால் மகாத்மா காந்தியே// இயன்றளவு மக்கள் உண்மையை கடைபிடித்து// இன்பமாக இருக்க தன்னம்பிக்கை கடைபிடித்து// இந்திய சமுதாயம் அன்பு வழியை கடைபிடிக்க// இன்னல்களை எடுத்தெறிந்து அயராது பாடுபட்டார்// இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தார்// இன்று அல்ல என்றுமே மறவோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

இசையே அருமருந்து

இசையே அருமருந்து இசையால் முத்தமிழ் உயர்ந்து நிற்கும் // இன்ப மகிழ்ச்சிக்கு இசையே உரம் // இறைவனை நாயன்மார், ஆழ்வார் பாடி துதித்தனர்// இரவில் தூங்க இசை மருந்து // இரவு பகல் உழைக்க இசை மருந்து // இவ்வளவுதானா வாழ்க்கை மாற இசை// இக்கட்டு காலத்தில் இசை மன நிம்மதி // இன்பமான சூழலில் மூளை செயல்பட இசை// இறந்தாலும் வார்த்தைகளை இசையாக வைப்பர் // இன்றுவரை பிறந்தாலும் மகிழ்வு இசையே // இசையே அகிலமும் சிறப்பு பெற அருமருந்து. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அன்பு

 அன்பு அன்பால் குடும்பத்தில் அனைவரையும்  பாதுகாக்கலாம்// அன்பு இருக்குமிடத்தில் சச்சரவு இல்லை// அன்பு அனைவரிடத்திலும் இருந்தால் நிம்மதியே // அன்பு உலகத்தையும் தன் வசப்படுத்தும்.  வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

குடும்பம்

 குடும்பம் குடும்பம் என்பது ஒரு கோவில் // குதூகலமாக வாழ்வதே நல் வாழ்க்கை. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

காலம்

 காலம் காலம் கடந்து விட்டால் வராது// காலத்தை பயன்படுத்தி வாழ்வில் உயர்வோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தூய்மை இந்தியா

 தூய்மை இந்தியா சுகாதாரம் கடைபிடித்தால் தூய்மை வரும்// சுத்தம் என்பது நம் கையில்// சுகமாக வாழ சுத்தம் அவசியம்// சுகாதாரம் நம் ஒழுக்கத்தின் சின்னம்// சுத்தம் என்றுமே சோறு போடும்// சுத்தம் இல்லையேல் நோய் வரும் // சுகாதாரமின்மை கொள்ளை நோய் தாக்கும் // சுத்தமான காற்றுக்கு மரம் வளர்ப்போம்// சுகத்திற்கு  மக்காத குப்பையை பிரித்து சுத்தம் தனி  ஒருவருக்கு மட்டுமில்லாது, சுற்றுப்புறத்தை தேசத்து மக்கள் அனைவருமே, சுத்தமாக சுகாதாரமாக வைத்து வாழ்ந்து, சுத்தமான தூய்மை இந்தியாவாக மாற்றுவோம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மீண்டும் வேண்டும் காந்தி

 மீண்டும் வேண்டும் காந்தி மீட்டெடுத்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி, மீளாத துயரை துடைத்து சுதந்திரம் வாங்கி தந்த காந்தி, மீண்டும் சுதந்திரத்தை கையில் எடுத்து ஆடுபவர்கள் அடங்க. மீண்டும் வேண்டும் மகாத்மா காந்தி. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

புன்னகை

 புன்னகை புன்னகையே  வாழ்வின் எதிரொலி// புன்சிரிப்பு அகத்தின் அடையாளம் // புன்னகை வேண்டும். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்