Posts

Showing posts from June, 2022

எண்ணங்கள்

 எண்ணங்கள் எதுவும் எடுத்துச் செய்யும் செயல்களில் எல்லாம் எதையும் சாதித்து விடுவோம் என்கின்ற எண்ண வலிமையோடு செய்தால் எதையும் எளிதாக முடித்து விடலாம். எல்லாம் நம் முயற்சிதானே// வி.எஸ்.ரோமா

துணிந்து நில்

 துணிந்து நில் கடந்தது கடக்கட்டும்// நிகழ்வது நிகழட்டும்// வருவது வரட்டும்// என்கின்ற மனோதைரியம் எவரையும் சாதிக்க வைக்கும் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மனிதா

 மனிதா மன்னிக்கும் மனப்பக்குவம் எங்கே? மற்றவர்கள நேசிக்கும் குணம் எங்கே? மனதை பக்குவப் படுத்தும் குணம் எங்கே? மனதார பாராட்டும் குணம் எங்கே? மட்டற்ற மகிழ்ச்சி எங்கே? மனிதா உதவும் குணம் எங்கே? மரம் போல் தழைத்து மற்றவர்களைப் பாதுகாப்பது எங்கே? மனிதா? மனிதா? மகிழ்ச்சி பொங்க வாழவும், மகிழச்சியைக் கொடுக்கவும் வாழப் பழக வேண்டும். மனிதா வாழ்வோம் மனிதா  மற்றவர்களை வாழவைப்போம் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நினைக்காத நாளில்லையே

 நினைக்காத நாளில்லையே முதலில் எழுத்துக் கூட்டிப் படித்தேனல்லவா? முதன் முதலாக கையெழுத்துப் போட்டேனல்லவா? எழுத்துப் போட்டியில் பரிசு வென்றேனல்லவர? பள்ளியில் விளையாட்டில் பங்கேற்றனல்லவா? கல்லூரியில் நண்பர்கள் வட்டம் போட்டோ மல்லவா? மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சியடைந்தேனல்லவா? கண் தானம் பதிவு செய்தேனல்லவா? உணவு சமைத்ததில் பாராட்டுப் பெற்றேனல்லவா? மழைத் தண்ணீரில் கப்பல் விட்டேனல்லவா?  எழுத்துத் துறையில் காலடி வைத்தேனல்லவா? எழுத்துலகில் தடம் பதித்தேனல்லவா? மனதில் நீங்காத அனைத்தும்நினைக்காத நாளில்லையே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

உதவி

 உதவி உண்மைக்கு உதவி செய்பவர்கள் உன்மையான உறவுகளும் உள்ளங்களில் உள்ளங்களில் பதிந்த       நல் உள்ளங்களும் உண்மையில் மிகக் குறைவே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

துணிவு

 துணிவு துணிவு நற்ச் செயல்களில் வேண்டும்// துணிவைத் தூணாக மனதில் நிறுத்தி துணிந்து நின்று, துரத்தி விட வேண்டும்  தீய செயல்களை துயரத்தில் சிக்காது வாழ்வதற்கு, துணிவு நற்ச்செயல்களில் இருக்க வேண்டும். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நடப்பது

 நடப்பது என்ன நடக்குமோ? எது நடக்குமோ? எப்பொழுது நடக்குமோ? எங்கு நடக்குமோ? எவரால் நடக்குமோ? எக்காரணத்தினால் நடக்குமோ? என்று, எண்ணி, எண்ணி வருந்தாது, எதற்கும் துணிந்து, எதிலும் நுழைந்து, எட்டிப் பிடிக்க வேண்டும் வெற்றிக் கனியை// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வாய்ப்பு

 வாய்ப்பு வாய்ப்பை தட்டிப் பறிப்பதில்லை// வாய்ப்பை தேடி அலைவதில்லை// வாய்ப்பு என்பது நம் திறமையை வளர்க்க வளர்க்க நம்மை நாடி வரும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நடிப்பு

 நடிப்பு நடிக்கக் கற்றுக் கொண்டால், நல்லவர் என்றப் பெயரை எவரும் எட்டி விடலாம்// நடிப்பு என்பது திரையில் மட்டுமல்ல நடிப்பு தற்காலத்தில் வாழ்விலும் தேவை// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வாழ்வே

 வாழ்வே வாழ்வின் மிகப் பெரிய வலியானது, வாழ்வின் தூணாக நின்று, வாழ்வில் சிறப்பித்துப் பயணிக்க வழிகாட்டியாக காட்டி நிற்கும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வெற்றி

  வெற்றிக்கு வழிவிடுவது தன்னம்பிக்கை// வெற்றிக்கு ஊக்கமளிப்பது தன்னம்பிக்கை// வெற்றியின் திறவு கோல் விடாமுயற்சி

எளிமை

 எளிமை எளிமை  என்பது, எதிலும் வேண்டும்// எளிமையை எல்லோரும் கடைபிடித்து, எட்டாத தூரத்திலிருக்கும், எல்லாப் பொருட்களையும் என் மனதானது எட்டிப் பிடித்தாலும், என் கைக்கு கிடைக்கவில்லையே என எண்ணி வருந்தாது, எட்டிப் பிடித்து எப்பொழுதும் மகிழ்வோடு வாழ வேண்டும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

கோபம்

 கோபம் நீ கோபப்பட்டால் வெறி உச்சமாகும்// நீ கோபப்பட்டால் உன் மனம் அலைபாயும்// நீ கோபப்பட்டால் விரோதிகள் பெருகும்// நீ கோபப்படாமல் அமைதியை நாடினால், நீ அனைவரையும் மகிழ வைத்து, நீயும் மகிழ்வாய்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நீயாக இரு

 நீயாக இரு நீ நீயாக இரு// நீ யாரையும் சார்ந்து இருக்காதே// நீ உன் வாழ்வை நிர்ணயம் செய்// நீ அனுபவிப்பை யெல்லாம் உன் அனுபவ வே// நீ யாரையும் சார்ந்திருக்காது, நீ நீயாகயிருந்து, நீ ஒரு முன்னோடியாகத் திகழ வேண்டும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வறுமை

 வறுமை வறுமையை நினைத்து கலங்காதே// வறுமையை விரட்ட சிந்தனை செய்// வறுமையை விரட்ட முயற்சி செய்// வறுமையை ஒழிக்க உழைப்பை பெருக்கு// வறுமையை ஓட ஓட விரட்டு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தேடல்கள்

 தேடல்கள் உலக வாழ்வில் தேடல்கள் கடலின் ஆழமே// உலக வாழ்வில் இன்ப துன்பங்கள் உண்டு// உலக வாழ்வில் மனித நேயம் எங்கே? உலக வாழ்வில் யாரும் பயணிக்க வேண்டுமே// உறக்கமின்றி உழைப்பை அஸ்திவாரமாக்கி, உலக வாழ்வை வென்று, உலா வர முயற்சி செய் மனிதா // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

விடு, விடாதே

 விடு, விடாதே தன் தேவைக்கு வரும் உறவுகளை விட்டு விடு// தன்னையே பெருமைப் படுத்தும் உறவை விட்டு விடு// தன் திறமைக்கு மதிப்பு கொடுக்கும் உறவை விட்டு விடாதே // தன்னைப் போலவே அனைவரும் என நினைக்கும் உறவை விட்டு விடாதே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

காதலே

 காதலே நீயில்லாமல் நானில்லை// நின் நினைவுகளே என் மகிழ்ச்சி// நின் மகிழ்வே என் மகிழ்வு// நீ எங்கிருந்தாலும் வாழ்கவென்பது அன்பு மிகுதியே // நீ துடித்தால் நான் துடிப்பேன்// நீ மடிந்தால் நானும் மடிவேன்// நீயே என் இதயத் துடிப்பு// நீ துடிப்பை விட்டால், தானாகவே என் துடிப்பும் நின்றுவிடும்.// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பெண்கள்

 பெண்களின் மகிழ்வு குடும்ப உயர்வு// பெண்களின் கட்டுப்பாடு குடும்ப உயர்வு// பெண்களின் நல் குணநலன்கள் குடும்ப உயர்வு// பெண்களின் நல் இதயம் குடும்பத்தின் பெட்டகம்// பெண்களே நாட்டின் கண்கள்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அன்பு

 அன்பு அன்பை யாராலும் அடித்து நொறுக்க முடியாது// அன்பை கொடுத்தாலும் மகிழ்வு அன்பை பெற்றாலும் மகிழ்வு அன்பு அனைவரையும் அடிமையாக்கும்// அன்பால் அகிலமும் ஆளலாம் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மரங்கள் பேசினால்

 மரங்கள் பேசினால் நீ என்னை வெட்டினால், உனக்கு பிராணவாயு போகும்// நீ என்னை வெட்டினால் உனக்கு மழை போகும்// நீ என்னை அழித்தால் உனக்கு பொருளாதாரம் போகும்// நீ என்னை ஒழித்தால், உனக்கு சுற்றுச்சூழல் பாதிக்கும்// நீ என்னை வெட்டினால் உனக்கு நிழல் போகும்// நீ என்னை வெட்டினால் உன் வாழ்வும் அழியுமே// நீ என்னை வளர்த்தால் உன் இயற்கைச் சூழல் பெருகுமே// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

🌷காதல் மந்திரம்

 🌷காதல் மந்திரம் 🌷காதல் என்கின்ற மந்திரமே, 🌷கரடு முரடுகளைத் தாண்டி, 🌷கற்பனைக் குதிரையை ஓட விட்டு, 🌷கடிவாளத்தை  கழட்டு விட்டு, 🌷கடைசியில் 🌷கற்பனையை நிஜமாக்கி 🌷கல்யாணத்தில் சேர்த்து வைக்கும். 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

இன்றைய பெண் சுதந்திரம்

 🌷இன்றைய பெண் சுதந்திரம்  🌷இன்னல்களை அடுக்கடுக்காய் சேர்ப்பதே// 🌷இது ஏன் என்று தட்டிக் கேட்பது  🌷இன்றும் இல்லையே// 🌷இன்றும் பாலியியல் பலாத்காரம் நிற்கவில்லையே// 🌷இப்பேற்ப்பட்ட சமூக அவலைகள் மாறவில்லையே// 🌷இக்கட்டான சூழ்நிலைகளில் மாறுபாடுகள் இல்லையே// 🌷இது மட்டுமா?  🌷இன்றும் பெண்கள் சாவி பொம்மைகளே// 🌷இப்படியல்ல அப்படியென்றால் வாயாடி பட்டப்பெயரே // 🌷இன்றும் குடிகாரக் கணவனிடம் சிக்கித் தவிப்பவது பெண்களே// 🌷இப்பொழுதும் குடிகார சகோதரர்களிடம் சிக்கித் தவிப்பது பெண்களே// இப்பொழுதும் குடிகார மகன்களிடம் சிக்கித் தவிப்பது பெண்களே// 🌷இப்படியே கடந்து செல்லுவதே // 🌷இன்றைய பெண்கள் சுதந்திரம்? 🌷இளைய தலைமுறையினரும்  🌷இப்படியே // 🌷இன்றும் காதலுக்கு மரியாதை இல்லையே// 🌷இன்றும் பெற்ற பிள்ளைகளிடம் பய உணர்வே // 🌷இன்றும், அன்றும், என்றும் மாறாத மாற்றம் பெண்கள் சுதந்திரமே// 🌷இன்றும் பெண்கள் சுதந்தரம் இப்படியே 🌷🌷🌷🌷இப்படியே     பெரும்பாலும் 🌷இப்படியே // 🌷இப்படிக்கு 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

சித்த மருத்துவமும் அதன் பயன்களும்

 சித்த மருத்துவமும் அதன் பயன்களும் தமிழர்களின் மருத்துவ அடையாளமே சித்த மருத்துவம். சித்தர்கள் ஆராய்ச்சி செய்து மருத்துவத்தைக் கண்டுபிடித்து, மக்களுக்கு நோய்களை நிவர்த்தி செய்து வருவதில் மகிழ்ச்சியடைய வைத்தனர். பதினெட்டு சித்தர்கள்தான் மருத்துவத்தை மூலிகைகள் மூலம் கண்டுபிடித்தனர். அனைத்து நோய்களையும், உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து நோய்களுக்கும் மூலிகை மூலமாக மருந்துகளைக் கொடுத்து நோயாளிகளைக் குணப்படுத்தினர். தமிழர்களின் அடையாளச் சின்னமே சித்த மருத்துவம் தான். நீர், நிலம், காற்று, நெருப்பு,  ஐந்து பஞ்ச பூதங்கள் அறிந்து அதன்படி வைத்தியம் செய்வது தான் சித்த மருத்துவம். நீண்ட நாட்கள் உட்கொண்டாலும் நோய் தீர்வு நிச்சயம் என்பதே சித்த மருத்துவம். சித்த மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை கொடுக்கலாம். மூலிகை என்பதை அனைவரும் அறிந்து எடுக்க முடியாது. சித்த மருத்துவர் மட்டுமே அறிந்த ஒன்றாகும். அகத்தியர் சித்தர் தன் ஏடுகளில் மருத்துக் குறிப்புகள் அனைத்தும் பதிய வைத்துள்ளார். அதன் மூலம் வழி வழியாக மருத்துவம் அறிந்து இன்று வரை மக்களுக்குப் பயனுள்ளதாக இர...

அழகு

 அழகு அழகாகத் தோன்றுவது  நதியானது ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது, அழகாகத் தோன்றுவது மரங்கள் வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது. அழகாகத் தோன்றுவது மனிதன் முயற்சியால் முன்னேறுவதைப் பார்க்கும் பொழுது, அழகாகத் தோன்றுவது அகமானது அழகாக இருக்கும் பொழுது, அழகு என்பது தோற்றத்தில் இருப்பது இல்லை // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்