Posts

Showing posts from May, 2023

நட்பின் மகிமை

 நட்பின் மகிமை நல்ல செயல்களை உடனிருந்து செய்து, நன்மைகள் பல கொடுத்தும், நன்மைகள் பல பெற்றும் , நல்லுறவை நீடிக்க வைக்கும்// நட்பு நம்மை எதிலும் சிக்காது பாதுகாத்து, நகலாக இல்லாத அன்பை அசலாக அள்ளிக் கொடுக்கும்// நட்புக்கு பணியாத நபர் உண்டோ? நட்பை மதித்தால் ஆழம் அதிகமாகி, நல்லோர் முன்னிலையில் முன்னேற வைக்கும்// நட்பின் வாசனை பரவ பரவ குற்றங்கள் குறையும்// நட்பின் புனிதம் அனைவருக்கும் கிடைக்க, நட்பை உயிராக நினைதத்து வாழ்வுப் பயணத்தில் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

புத்தகச் சுமை

 புத்தகச் சுமை புத்தகங்களை சுமந்து, புதுப்புது சமாச்சாரங்கள அறிந்து, புவியில் சிறந்து வாழ்ந்து, புலப்படாததை ஆசிரியர் மூலம் அறிந்து, புதுக்கல்வியை மனதில் பதிய வைத்து, புது உலகை வெற்றி வலம் வந்து  புதுப்புது கல்வியாளர்களை சந்தித்து, புண்ணிய பாரத தேசத்துக்கு புகழ் வாங்கித் தந்து, புகழ் மாலையை வெற்றி மாலையாக வாங்கி வந்து, புதுப் புது தேசங்களை வலம் வந்து, புகழ் பாடும் நேரத்தை மகிழ்வில் மிதந்து,  புத்தகச் சுமையை பின்னாளில் பணச்சுமையாக மாற்றித் தந்த கடவுளுக்கு நன்றி // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

உறக்கம்

 உறக்கம் உறக்கம் நோயை விரட்டும்// உறக்கமே வேலையாக இருந்தால் அழிவைத் தரும்// உறக்கம் வராவிட்டால் மன நோயைத் தரும்// உறக்கம் வரும் நேரம் உறங்குவது உடல் நலம் தரும்// உறக்கமில்லாது உழைத்தால் உடல் சோர்வு தரும்// உறக்கம் (நல்)  அனைவருக்கும்  நலம் தரும்// உறக்கம் ஆழ்ந்திருந்தால் ஆபத்து தரும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வாழ்க்கை என்ன கண்ணா மூச்சி ஆட்டமா?

 வாழ்க்கை என்ன கண்ணா மூச்சி ஆட்டமா? வாழ்வில் இன்பம் துன்பம் இயல்பே // வருங்காலம் கண்முன வந்து போகுதே // வாழ்வில்  கடந்ததும் கண்முன் வருகின்றதே // வந்ததும், நடப்பதும், வருவதும்  எதிர்நீச்சலே // வாழ்வில்  நடப்பது கண்ணாமூச்சி ஆட்டமே// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

கல்வி

 கல்வி கல்விச் செல்வம் உயர்ந்தது// கண்ணொளி தரும் மருந்து// கற்றவர் செல்லுமிடம் சிறப்பு// கல்வியே ஒழுக்கத்தின் ஆலமரம்// கற்றால் செல்வம் வரும்// கலகத்தை ஒதுக்கும் கல்வி// கரும்பு திண்ண கூலியா? கற்றல் கற்பித்தல் உயர்வானதே // கல்விக்கு அனைவரும் பணிவர்// கல்விக்கு அகிலத்தில் இடமுண்டு// கண் தானத்திலும் கல்வி புகட்டலே சிறப்பு// கற்றவரின் மனமோ சிந்திக்கும்// கற்று விட்டால் பயம் ஓடும்// கற்பிக்கும் ஆசிரியரை மறவாதே// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்