புத்தகச் சுமை
புத்தகச் சுமை
புத்தகங்களை சுமந்து,
புதுப்புது சமாச்சாரங்கள அறிந்து,
புவியில் சிறந்து வாழ்ந்து,
புலப்படாததை ஆசிரியர் மூலம் அறிந்து,
புதுக்கல்வியை மனதில் பதிய வைத்து,
புது உலகை வெற்றி வலம் வந்து
புதுப்புது கல்வியாளர்களை சந்தித்து,
புண்ணிய பாரத தேசத்துக்கு புகழ் வாங்கித் தந்து,
புகழ் மாலையை வெற்றி மாலையாக வாங்கி வந்து,
புதுப் புது தேசங்களை வலம் வந்து,
புகழ் பாடும் நேரத்தை மகிழ்வில் மிதந்து,
புத்தகச் சுமையை பின்னாளில் பணச்சுமையாக மாற்றித் தந்த கடவுளுக்கு நன்றி //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment