Posts

Showing posts from March, 2023

சகிப்புத்தன்மை

 சகிப்புத்தன்மை மனிதர்களின் சண்டை சச்சரவுகளைப் பார்த்து, மக்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாதது, மகிழ்ச்சியென்பதை அறியாத மனிதர்களைப் பார்த்து, மகிழ்ச்சிக்கு அனைவரையும் ஒத்துப்போகாதது பார்த்து, மன்னிப்புக்கு இடம் கொடுக்காதது பார்த்து, மறந்து போவதற்கு கெட்டதற்கு இடம் கொடுக்காதது, மக்கள் சேவையே மகேசன் சேவை அறியாதது, மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் இல்லாதது, மரங்களை வெட்டுவதில் தீவிரம் காட்டுவது, மக்கள் நம் நாட்டுக்கு உழைப்பை கொடுக்காதது, மகிழ்ச்சியை குடும்பத்தோடு கழிக்கத் தெரியாதது குறித்து, மனிதர்கள் படும்பாடு சக மனிதர்கள் அறியாதது, மனம் நொந்துபோனாலும் சகிப்புத்தன்மையோடு வாழ்கின்றேன்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தமிழ் மொழியின் சிறப்பு

தமிழ் மொழியின் சிறப்பு தமிழ் எழுத்துகளின் ஒலி மிக எளிமையே// தமிழ் மொழி உச்சரிப்பு மிக அழகே // தமிழ்மொழியை பேசும் பொழுது காற்று வெளிவருவது குறைவே // தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்ற பொருளே// தமிழ்மொழி மிக பழமை வாய்ந்த மொழியே // தமிழ் மொழி உலகம் முழுவதும் வீசுகின்றதே // தமிழ் மொழியின் சிறப்பினை உணர்ந்தவர் ஜி.யு. போப் அவர்களே// தமிழ்ப் பற்றால் கல்லறையில் தமிழ் மாணவன் என்று பொறித்தவரே // தமிழ் இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென் கீழ் கணக்கு நூல்களே// தமிழ் மொழியின் மிகப் பழமையான நூல் தொல்காப்பியமே// தமிழ் மொழி இந்திய அரசால் செம்மொழி ஆக்கப்பட்டதே // தமிழை செம்மொழியாக குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐயா அறிவித்தாரே // தமிழ் மொழி காலத்தால் என்றென்றும் அழியாத மொழி// தமிழ் மொழி அன்றும் இன்றும் என்றும் உயிர்ப்புடன் வாழுமே// தமிழ் மொழி ஒன்றுக்குத்தான் இலக்கணங்களைக் கொண்ட பெருமையே // தமிழின் பெருமைக்கு ஐம்பெரும்காப்பியங்களே// தமிழ்மொழியில் பிற மொழி கலக்காது பேசுவோமே // தாய்மொழி தமிழை தூய்மையாக பேசுவோமே // தமிழ் நூல்களைப் பேணி பாதுகாப்போமே// தமிழைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையே// யாம...

கிராம வாழ்க்கை

 கிராம வாழ்க்கை இயற்கை உணவு உண்டு வாழ்ந்து, இன்னல் இன்றி உடல் இருந்து, இருப்பிடத்திற்கே உறவுகள் தேடி வந்து, இன்பமாக கூடி வாழ்ந்து மகிழ்ந்தோம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

காத்திருப்பு

 காத்திருப்பு வேடன் நம்மை நோக்கி அம்பு எய்துவானோ? வேடன் வேறு இடம் போவானோ? வேடந்தாங்கல் பறந்து சென்று விடலாமா? வேறு மரம் சென்று கூடுகட்டலாமா? வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

பூங்கொத்து

பூங்கொத்து எனக்கு பூங்கொத்து கொடுக்க வந்தாயோ... என்னையும் மகிழ்ச்சியில் பறக்க வைக்கிறாயோ?... வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மகிழ்ச்சி

 மகிழ்ச்சி மனிதனுக்கு மகிழ்ச்சியே சிறப்பான வாழ்வு// மன மகிழ்ச்சி அகத்தில் வேண்டும்// மகிழ்ச்சி உள்ளேயிருந்தால் சிறப்பே // மகிழ்ச்சியில் உறக்கம் தடைபடாது// மகிழ்வு பொருளாதாரத்தை சீர்செய்யும்// மகிழ்ச்சி நோயை விரட்டி, மகிழ்வுடன் உணவை உண்ணச் செய்யும்// மகிழ்ச்சியில் சிந்தனையோடு செயல்பட்டு, மகிழ்ச்சியில் நல்ல செயல்களை செய்யலாம்// மகிழ்வு ஒற்றுமையை வளர்க்கும் // மகிழ்வு நம் முகத்தை ஒளிபெறச் செய்யும்// மகிழ்ச்சி என்பது மற்றவர்களை நேசிப்பதில் வேண்டும்// வி.எஸ்.  ரோமா கோயம்புத்தூர்

கல்வி

 கல்வி கற்க வேண்டிய வயதில் கல் வெட்டியவனே, // கல்வி கற்காமல  காலம் வீணானதே // கல் வெட்டி வயிறு நிரப்பி, கல்வெட்டி கவலையை வளர்த்தவனே // கல்வெட்டி உடலை வீணடித்தவனே // கல் உடைந்தது, கல் மாதிரி மனதும் உடைந்தது, கலக்கம் வந்து கவலையைப் பெருக்கியது// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மிக அதிகமாக

 மிக அதிகமாக மிக அதிக யோசனைகளோடு, மிக அதிக பேராசையோடு, மிக அதிகமாக அன்பைச் செலுத்தி, மிக அதிகமாக பேச்சை உதிர்த்து, மிக அதிகமாக பணத்தை விரையம் செய்து, மிக அதிகமா வீணாக காலத்தைக் கடத்தி, இதனால், மிகவும் வருந்திக் கொண்டிருப்பவனோ? மிக, மிக அதிகமாக மனவேதனையோடு, துன்பத்தை எடுத்துக் கொள்வான வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மிக அதிகமாக

 மிக அதிகமாக மிக அதிக யோசனைகளோடு, மிக அதிக பேராசையோடு, மிக அதிகமாக அன்பைச் செலுத்தி, மிக அதிகமாக பேச்சை உதிர்த்து, மிக அதிகமாக பணத்தை விரையம் செய்து, மிக அதிகமா வீணாக காலத்தைக் கடத்தி, இதனால், மிகவும் வருந்திக் கொண்டிருப்பவனோ? மிக, மிக அதிகமாக மனவேதனையோடு, துன்பத்தை எடுத்துக் கொள்வான வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

சாட்சி

 சாட்சி கண் எனும் காமிராவினுள் படம் பிடித்து சாட்சி எனும் பிரிண்டைக் கொடுத்தேன். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

சிந்தனை

 சிந்தனை மனம் என்றுமே போராட்டம் // மனிதப் போராட்டத்தில் வெற்றி பெறலாம்//           ஆனால் மனப் போராட்டத்தில் வெற்றி பெறுவது கடினமே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தாமரைப்பூ

 தாமரைப்பூ நம் நாட்டின தேசிய மலர்// நம் நாட்டில் புனிதமாக ப போற்றப்படும்// இப்பூவின் இலையில் தண்ணீர் ஒட்டாது// சேற்றில் வளர்ந்தாலும் சுத்தமாக இருக்கும்// தாமரைப்பூ மூலிகை குணம் நிறைந்தது// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்
 இந்த வாழ்க்கை எது வரையில் இன்று வாழ்வில் போராட்டம் மிகுதி// இப்படித்தான் வாழ வேண்டும் ஆசை// இவ்வுலகில் அனைத்துமே பெற ஆசை// இறப்புவரையில் சக்கரம் போல் வாழ்க்கை// இவனைப் போல் வாழ வேண்டும்// இப்படித்தான் வாழ வேண்டும் ஆசை// இது போதவில்லையே பேராசை வாழ்வு// இறப்பு வரையில் இந்த வாழ்க்கை// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

என்னை விட்டு போகாதே

 என்னை விட்டு போகாதே என் பாதுகாப்புக்கு ஏற்றத் துணையே// என்னை வீட்டிலும் கவனமாகப் பாதுகாத்தாய்// எனக்கு வெளியிலும் பாதுகாவலராக வந்தாய்// என் ஐந்தறிவு (நாய்க்குட்டி)ஜீவன் அல்ல  நீ .... வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

எண்ணங்கள்

எண்ணங்கள் எண்ணங்கள் அழகானால் எதுவும் மகிழ்வே // எண்ணங்கள் எதிர்மறையானால் எதுவும் கசப்பே || எதையும் சிந்தித்து செயலாற்றி மகிழ்ந்து, எப்படியும் முயற்சி வெற்றிக்கு வழியே, என எண்ணங்களை ஓட விட்டு வாழ்வோம்// வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

மனிதனுக்குத் தேவையானவை -

 🌷மனிதனுக்குத் தேவையானவை - 🌷அன்பு 🌷அறிவு 🌷அமைதி 🌷அச்சம் 🌷அகம் மகிழ்வு 🌷அடுத்தவர் மகிழ்வு 🌷அனுதினமும் உழைப்பு 🌷அனைத்தும் 🌷அனைவருக்கும் 🌷அவசியம் தேவை 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

ஆறுதல்

 ஆறுதல பாட்டியின் சோகத்திற்கு காரணம் எதுவுவோ? பாருப்பா எனக்கு யாரும் இல்லையே? யாரு வேணும்? ஆறறிவு மனிதனா? யாரும் வேண்டாம். நான் இருக்கின்றேன். // (குரங்கு) வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பிறந்த நாள்

 பிறந்த நாள் பூங்கொத்து தருகின்றேன் வாங்கிக்கோ பாப்பா,  பூ மாதிரி வாசனையாக வாழனும் பாப்பா வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பெண்களும் சுதந்திரமும்

 பெண்களும் சுதந்திரமும் பெண்களுக்கு வீட்டு வேலைகள் செய்ய சுதந்திரம் // பெண்களுக்கு குடும்ப பாரத்தில் சுதந்திரம்// பெண்களுக்கு ஆலோசனை சொல்வதில் சுதந்திரம்// பெண்களுக்கு எதிர் நீச்சல் போடுவதில் சுதந்திரம்? பெண்களுக்கு தட்டிக் கேட்பதில் சுதந்திரம் எங்கே? வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

உனக்குள் என்ன இல்லை

 உனக்குள் என்ன இல்லை உனக்குள் சிந்திக்கும் திறன் இல்லையா? உனக்குள் குடும்ப நபர்களின் கவலை இல்லையா? உனக்குள் உதவும் குணம் இல்லையா? உனக்குள் எதிர்த்துப் போராடும் திறன் இல்லையா? உனக்குள் எதையும் சமாளிக்கும் மனப் பக்குவம் இல்லையா? உனக்குள் கல்வி அறிவு இல்லையா? வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மலரும் பெண்ணும்

 மலரும் பெண்ணும் பெண் பணிவிடை செய்வதில் மலரே // பெண் காதல் செய்வதில் மலரே // பெண் குழந்தையிடம் அன்பில் மலரே // பெண் சச்சரவு கூட்டத்தில் மலரே " வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பெண்

 பெண் பெண்களே வீட்டின் அஸ்திவாரமும் தூணும் // பெண்களின்றி குடும்ப வாழ்வு இல்லை// வி.எஸ். ரோமா கோயம்புத்தூர

பெண்ணின் வலி

 பெண்ணின் வலி பெண்ணுக்கு வேலைச் சுமையின் வலி // பெண்ணுக்கு குடும்ப மனச்சுமையின் வலி// பெண்ணுக்கு குடிகாரக் கணவனால் வலி// பெண்ணுக்கு குடிகார மகனால் வலி // பெண்ணுக்கு பொருளாதரத் தட்டுப்பாடு வலி // பெண்ணுக்கு உறவுகளால் மன வலி// பெண்ணுக்கு அலுவலகச் சுமையால் வலி // பெண்ணுக்கு குழந்தைகளை கரையேற்றும் வலி// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பணம்

 பணம் பணம் இருந்தால் பலவற்றையும் சாதிப்பது ஒரு புறம்// பணமும் பாசமும் சேர்ந்தால் தான் வெற்றி// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்