Posts

Showing posts from February, 2024

அன்றாட வாழ்வில் அறிவியல்

 அன்றாட வாழ்வில் அறிவியல் அலைபேசியில் அழைப்பது மட்டுமா? அன்றாடச் செய்திகளை அறிவது எளிது// அருமையான கவி போட்டியில் கலந்து, அதில் பரிசுகளும் பெற்றிட வாய்ப்பு // அலைபேசி மூலம் அனைத்து உலகமும் அடக்கம்// அலைபேசி கையடக்கமாக இருந்தாலும், அதில் அறிந்து கொள்வது கடல் அளவு // அகிலத்து புத்தகங்களும படிக்கலாம் // அன்றாடம் நொடிப்பொழுது கூட விடாது பயன்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்பு அலைபேசியே எனக்கு மகிழ்ச்சி. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

மனதின் காயங்கள்

 மனதின் காயங்கள் மனதின் காயங்களுக்கு மருந்து நாமே // மனது புண்ணுக்கு மருத்துவம் ஏது? வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

நட்பே உலகு

 நட்பே உலகு நட்பு இருந்தால் மகிழ்ச்சி கிட்டும்// நட்பு நல்லதாக இருந்தால் நல்லதே // நட்பு வட்டம் காலம் சுகமே // நட்பில் கடைசி வரை செயல்படுவது அரிதே // நண்பர்கள் கூடினால் அறிவு வளர்ச்சியே // நட்பு என்பது அடிப்படை அவசியமே // நட்பு என்பதில் பிரிவு  துன்பமே // நல் நட்பு கிடைப்பது சிரமமே// நட்பின் ஊக்கம் விலை மதிப்பில்லை // நட்பின் இலக்கணம் மதிப்பு மிகுதியே வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

நம்பிக்கை

 நம்பிக்கை 🌷நம் முன்னேற்றம் 🌷நம் கையில் என்று 🌷நம்பிக்கை வைப்போம் வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

காதலர் தினம்

 காதலர் தினம் காதல் என்றால் புனித அன்பு // கபடமற்ற நட்பு புனித காதல் // காதலுக்கு பணம் வித்தியாசம் இல்லை // காதல்வயப் பட்டால் மதம் வேறுபாடு இல்லை // காதல் உறவுகளை பார்க்காது இருக்கும் // காதலுக்கு மரியாதை அளிப்பது சிறப்பு // கடும் துன்பம் வந்தாலும் ஓட்டும்// காதலர் தினத்தில் வாழ்த்து சொல்வோம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

சிந்தனை

 சிந்தனை 🌷சிறப்பாக சிந்தித்தால் முன்னேற்றம் உண்டு// 🌷உன் எண்ணங்கள் செயலாக முடியும்// 🌷முடியும் என்று நினைத்தால் முன்னேறலாம்// 🌷முன்னேற்றப் பாதையில் பயணம் செய்து, 🌷செயல்களை நல்வழியில் செய்து முடித்து, 🌷முடியாததை முடியும் என்று முயல்வோம் . 🌷வி.எஸ். ரோமா 🌷கோயம்புத்தூர்

இணைந்த கைகள்

 இணைந்த கைகள் இணைந்த கைகள் சாதிப்பது ஏராளம் // இன்று அல்ல என்று மே அப்படித்தான் // இரு கைகள் ஓசை எழுப்பினால், இதில் சப்தம் அதிகமாக இருக்கும் // இணைந்த கைகள் எதிலும் எதிர்க்கும் // இருவரும் கலந்து ஆலோசித்து செய்வர் // இப்படித்தான் இதன் நிபந்தனையென அறிவர். // இன்னல்களை புயலைப் போல வீசியடிப்பர். // இன்பமும் துன்பமும் இல்லாது இருப்பர் // இயற்கையை இணைந்து பேணிக் காப்பர் // இறக்கும் வரை இணைபிரியாது இருக்க வேண்டும். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

 நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ உன் புண்படும் வார்த்தையால் வீச, உன் செய்கைகளால் நான் புண்பட உன் எதிர் வார்த்தையால் மனம் குழம்ப, உன்னால்  வீழ்வேன் என்று நினைத்தாயோ? வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

இயற்கை

இயற்கை இறைவன் கொடுத்த தை நன்கு பயன்படுத்தி, இயற்கையை அழிக்காமல் பேணிப் பாதுகாத்து, இயன்றளவு காடுகளை அழிக்காமல் வளர்த்து, இயற்கையான பிராணவாயுவை சுவாசித்து வாழ்வோம். வி. எஸ்.ரோமா கோயம்புத்தூர்