பொங்கல் திருநாள்
பொங்கல் திருநாள்
விளைச்சலுக்கு உதவிபுரியும் சூரியன், மண், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதே பொங்கல திருநாள்//
விளைச்சலுக்கும் உழவுத் தொழிலுக்கும் மரியாதை செலுத்தும் நாள்//
விளைந்த நெல்மணியால் பொங்கலிட்டு சூரியனை வழிபடும் திருநாள்//
விவசாயிகளுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே மகிழ்வு திருநாள்//
விளைந்த புது நெல், மஞ்சள், கரும்பு வைத்து வழிபடும் திருநாள்//
விவசாயிகள் தோட்டத்திலும், மற்றவர்கள் மனையிலும் கொண்டாடும் திருநாள்//
விளையாட்டுப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடையுடுத்தி மகிழும் நாள்//
புதுப் பானையில பொங்கிவரும் பொங்கலைக் கண்டு மகிழ்ந்து பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழும் திருநாள்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment