சமூகம்

 சமூகம்


சமூகத்தில் அனைத்தும் மாறுபட்டு,


சச்சரவுகள் மேலோங்கி நின்று,


சஞ்சலம் தரும் மனதோடு,


சதாகாலமும் போராடிக் கொண்டு,


சமுதாயப் பார்வையில் புன்னகைப் பூத்து,


சகலமும் என் கையில் என்று மனம் செயல்பட்டு,


சம்பிரதாயம், சடங்கு, ஒற்றுமை மாறுபட்டு,


சமூக  கௌரவம் அர்த்தமற்று ,


சமூகம் அன்றாடம் சடுகுடு  விளையாட்டாகி


சகலமும் போராட்டம் நிறைந்த வாழ்வாகிவிட்டது.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்