இனியவை இன்முகத்துடன் இருப்பது இனியவை // இரவு பகல் பாராது உழைப்பது, இனிய வார்த்தைகள் பேசி மகிழ்விப்பது, இன்னாரை பகை கொள்ளாது இருப்பது, இன்னல்களை சாதுர்யமாக எதிர் கொள்வதும், இடையூறுகளை தகர்த்து விட்டு முன்னேறுவதும், இன்று போய் நாளை என்று இல்லாதிருப்பதும், இன்றும் என்றும் நல்லதை நினைப்பதும், இக்கட்டான சூழ்நிலைகளை அறிவால் வெல்வதும், இதுவல்லவோ இனிய செயல்கள் அல்லவா? வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்
போட்டி வேண்டும் மனித வாழ்வில் 🔥போராட்டம் வேண்டாம் மனித வாழ்வில் 🔥போராட்டம் நல்வழி பாதையில் பயணிக்கலாம் 🔥போராட்டம் கெட்ட வழியில் வேண்டாம் 🔥போட்டி போடுவது யாரோடும் கூடாது. 🔥போட்டி தனிப்பட்ட செயலில் வேண்டும் 🔥போட்டிக்காக மனச் சோர்வு கூடாது 🔥போட்டியில் வெற்றி பெற உழைப்போம் 🔥போட்டியில் வெற்றியானது கொடுக்க வாங்க வேண்டும் வி. எஸ். ரோமா கோயம்புத்தூர்
பொறுமையும் பொறாமையும் பொறுமை மனித இனத்துக்கு தேவை // பொறுமையோடு இருந்தால் பூமியை ஆளலாம்// பொறுமை மனிதனை உயர வைக்கும் // பொறுமை நோயை விரட்டி ஓட்டும்// பொறாமை மனிதனுக்கு தீய குணம் // பொறாமை மனித வாழ்வுக்கு போராட்டம் // பொறாமை உடலில் வியாதியை கொடுக்கும் // பொறாமை மனிதனின் அழிவுக்கு காரணம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்
Comments
Post a Comment