என் பேனா
என் பேனா
என் பேனா எழுத்துக்கு ஊன்றுகோல் //
எழுத்தாணி என் மனதில் வேரூன்றி,
என் கவலையை நீக்கி போட்டு,
என் மனதை இலகுவாக வைத்தது //
என்றும் அழியா நினைவுகளை கொடுத்து,
என்னை உலகுக்கு உதாரணம் காட்டி,
என்னை மனதார மக்கள் பாராட்டி,
என் பேனாவால் உதிர்ந்த முத்துகள்
என்னோடு முத்து மாலையாக இருந்து,
எனக்கு புகழ் சேர்த்து கொடுத்து,
என் வாழ்நாளை சாதனையாக மாற்றி
என் பேனா என்னோடு புதைந்தது.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment