விதியை மதியால் வெல்லு
விதியை மதியால் வெல்லு
சோதிடம் பார்த்து விதியை நினைத்து,
சோம்பல் கொண்டு காலம் ஓட்டாதே //
எண்ணங்களை நல் விதத்தில் ஓடவிட்டு,
எண்ணங்களை நிறைவேற்ற முயற்சி எடு //
அடுத்தவர் மேல் பழி போட்டு தப்பித்து,
அழிவில் சிக்கிக் கொண்டு திணறாதே //
எடுக்கும் செயல்களை துரிதமாக செய்து,
எல்லாம் நன்மைக்கே என்று செயல்படு //
சாஸ்திரம் பார்த்து அனைத்தும் தள்ளிப்போட்டு,
சாவது மேல் என்று நினைக்காதே/
மதியால் அனைவரும் சிந்தித்து செயல்பட்டு,
மதியால் விதியை உதறிவிட்டு வாழ்வோம்.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment